த1ப1ஸ்விப்4யோதி4கோ1 யோகீ3 ஞானிப்4யோபி1 மதோ1தி4க1: |
க1ர்மிப்4யஶ்சா1தி4கோ1 யோகீ3 த1ஸ்மாத்3யோகீ3 ப4வார்ஜுன ||46||
தபஸ்விப்யஹ--—ஸன்யாஸிகளை விட; அதிகஹ--—உயர்ந்த; யோகி--—ஒரு யோகி; ஜ்ஞாநிப்யஹ--—கற்கும் நபர்களை விட; அபி—--கூட; மதஹ--—கருதப்படுகிறார்; அதிகஹ--—உயர்ந்தவர்; கர்மிப்யஹ--—சடங்கு செய்பவர்களை விட; ச—--மற்றும்; அதிகஹ—--உயர்ந்தவர்; யோகி--—ஒரு யோகி; தஸ்மாத்--—எனவே; யோகி--—ஒரு யோகி; பவ--—ஆகு; அர்ஜுனா---அர்ஜுனன்
BG 6.46: ஒரு யோகி ஸன்யாஸியை விட கற்றறிந்த ஞானியை விட மேலும் சடங்குகளை செய்பவரை விட மேலானவர். எனவே, அர்ஜுனா, யோகியாக இருக்க முயற்சி செய்.
த1ப1ஸ்விப்4யோதி4கோ1 யோகீ3 ஞானிப்4யோபி1 மதோ1தி4க1: |
க1ர்மிப்4யஶ்சா1தி4கோ1 யோகீ3 த1ஸ்மாத்3யோகீ3 ப4வார்ஜுன ||46||
ஒரு யோகி ஸன்யாஸியை விட கற்றறிந்த ஞானியை விட மேலும் சடங்குகளை செய்பவரை விட மேலானவர். எனவே, அர்ஜுனா, யோகியாக இருக்க முயற்சி செய்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
துறவி (த1ப1ஸ்வி) என்பவர் முக்தியைத் தேடுவதற்கு ஒரு கருவியாக தன் உடம்பை வருத்திக் கொள்ளும் கடும் நோன்பு மற்றும் மிகவும் துறவரம் கூடிய வாழ்க்கை முறையையும் ஏற்று, சிற்றின்ப இன்பங்கள் மற்றும் பொருள் செல்வத்தை குவிப்பதைத் தவிர்ப்பவர். ஞானி என்பவர் கற்றறிந்தவர். ஒரு செயல்களை செய்பவர் (கர்மி) பொருள் செழுமையையும் தேவலோக இருப்பிடத்தையும் அடைவதற்காக வேத சடங்குகளைச் செய்பவர். ஸ்ரீ கிருஷ்ணர் யோகி அவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் என்று அறிவிக்கிறார். இதற்கான காரணம் எளிமையானது. செயல்களை செய்பவர் (கர்மி), ஞானி மற்றும் தபஸ்வியின் குறிக்கோள் உலக சாதனை; அவர்கள் இன்னும் இருப்பின் உடல் தளத்தில் உள்ளனர். யோகி உலகத்திற்காக அல்ல, கடவுளுக்காக பாடுபடுகிறார். இதன் விளைவாக, யோகியின் பயிற்சி ஆன்மீக தளத்தில் உள்ளது மற்றும் அவை அனைத்தையும் விட உயர்ந்தது.